டிஐஜி விஜயகுமார் மரணம் - கோவையில் பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய இளைஞர்கள்!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கோவை - தடாகம் சாலை திருவள்ளுவர் நகரை சேர்ந்த இளைஞர்கள் டிஐஜி விஜயகுமாருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாருக்கு இளைஞர்கள் பேனர் வைத்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த 7ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது.

டிஐஜி விஜயகுமார் இறப்பிற்கு தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தலைவர், காவல் அதிகாரிகள் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது இந்த தற்கொலை காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் ஊரை சேர்ந்த இளைஞர்கள் டிஐஜி விஜயகுமாருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வில் நஞ்சுண்டாபுரம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் VKV சுந்தரராஜ், தடாகம் காவல்துறையினர் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.



இளைஞர்களின் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...