பல்லடம் அருகே கோழிக்கழிவில் விஷம் வைத்து 60 நாய்களை கொன்ற இறைச்சி கடை உரிமையாளர் கைது!

பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் கோழிக்கழிவில் விஷம் கலந்து வீசி வீட்டு வளர்ப்பு நாய்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட நாய்கள் பலியான சம்பவத்தில் இறைச்சி கடை உரிமையாளர் பாலு என்பவரை பல்லடம் போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே 60 நாய்களை விஷம் வைத்து கொலை செய்த இறைச்சி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்கள் வளர்த்து வந்த செல்லப் பிராணிகளான 60க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன.



இதனால் நாய்களை வளர்த்து வந்த பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நாய்கள் இறப்பிற்கான காரணம் குறித்து அப்பகுதியினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் குடியிருந்து கொண்டு கரைப்புதூர் லட்சுமி நகரில் இறைச்சி கடைகள் மற்றும் உணவகம் நடத்தி வரும் பாலு என்பவர் தான் வளர்த்து வரும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து காயப்படுத்தி வந்துள்ளன.

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது கடை அருகே உள்ள கோழி இறைச்சி கடைக்குச் சென்று அங்கு வீணாகும் கோழி கழிவுகளை வாங்கி வந்து அதில் விஷம் கலந்து அவற்றை குப்பைகளில் வீசி சென்றதும், இதனை உட்கொண்ட வளர்ப்பு நாய்கள் அடுத்தடுத்து பலியானதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் நாய்களை விஷம் வைத்து கொன்ற வழக்கில் பாலுவை கைது செய்துள்ளனர்.

வளர்ப்பு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த இறைச்சிக் கடைக்காரர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...