கோவையில் மின்சார வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கோவை மாவட்டத்தில், அனைத்து மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மின் வாரியம், மின் உரிமை வழங்கும் வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை கண்டித்து செஞ்சிலுவை சங்கம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில், மின்வாரியம், மின் உரிமை வழங்கும் வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் வாரியம், மின் உரிமை வழங்கும் வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை கண்டித்து அனைத்தும் மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சோதனை அறிக்கைக்கு பதிலாக அனெக்சர் 1, 2, 3 கட்டாயம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும், மின் உரிமம் மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும்,

வீட்டு உரிமையாளர்கள், சிவில் இன்ஜினியர்கள், மேஸ்திரிகள் மின் உரிமம் பெற்ற வயரிங் கான்டிராக்டர்களின் மேற்பார்வையில் மட்டுமே மின்சார பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாத கட்டிடத்திற்கு மின் இணைப்புகளை வழங்கக் கூடாது,

உரிமம் புதுப்பிக்கும் போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும், உரிமம் வழங்குதல் புதுப்பித்தல் போன்றவற்றை ஆன்லைன் முறையில் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், 42 அடி உயரம் உள்ள வீட்டுமனை கட்டிடங்களுக்கும் 2000 சதுர அடி வரை உள்ள வணிக கட்டிடங்களுக்கும் Completion Certificate இல்லாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும்.

ISI மற்றும் ISO தரச் சான்றுள்ள Duplicate இல்லாத மின் சாதனங்கள் மற்றும் மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதுகட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள், பிளம்பர்கள், ஹெல்பர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...