வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை இயக்குனர் திடீர் ஆய்வு!

வால்பாறை அரசு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளான நிலையில், மருத்துவமனை மற்றும் ஆம்புலன் வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து மண்டல துணை இயக்குநர் டாக்டர் மீரா ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் மீரா ஆய்வு மேற்கொண்டார்.

வால்பாறை பகுதியில் அரசு மருத்துவமனை பல ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பிரசவம் மற்றும் பொது சிகிச்சையை பொதுமக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மண்டல துணை இயக்குநர் டாக்டர் மீரா ஆய்வு மேற்கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு நோயாளியை 108 வாகனத்தில் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்கு மருத்துவமனை வாயிலில் வாகனத்தை நிறுத்தியதில் வாகனம் பின்னோக்கி இயங்கி விபத்து ஏற்பட்டு சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 108 வாகன ஓட்டுனரும் நோயாளியும் விபத்தில் சிக்கினர்.

இதை தொடர்ந்து மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு வாயிலின் முன்பு 108 வாகனம் நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.



108 வாகனம் வந்து நோயாளியை இறக்கி விடுவதை சோதனை மூலம் ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து 108 வாகன மேலாளரும் 108 வாகனம் ஓட்டுனர்கள் ஆயிவில் இருந்தனர். தற்போது மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிடங்களை ஆய்வு செய்தார்.



ஆய்வின் போது வால்பாறை நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் மருத்துவமனை கட்டிடங்களுக்கு பாதுகாப்பு கூரை அமைக்க வேண்டும். எக்ஸ்ரே, ரத்த வங்கி, சமையலர், மருத்துவமனை காவலர் எலெக்ட்ரிசியன் மருத்துவமனைக்கு பணியாளர்கள் தேவை என்று மண்டல துணை இயக்குனரிடம் தெரிவித்தார்.

அதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக இயக்குனர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் வால்பாறை மருத்துவர் மருத்துவர்கள் கட்டிட ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...