உடுமலையில் 3 நாட்களாக நடைபெற்ற மலைவாழ் மக்கள் போராட்டம் வாபஸ் - ஆடி, பாடி கொண்டாட்டம்!

உடுமலை அருகே தங்கள் பகுதிக்கு சாலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சியர் உறுதி செய்ததை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்று ஆடி, பாடி கொண்டாடினர்.



திருப்பூர்: உடுமலை அருகே கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சியர் உறுதி செய்ததை தொடர்ந்து மலைவாழ் மக்கள் 3 நாள் போராட்டத்தை வாபஸ் பெற்று ஆடி, பாடி கொண்டாடினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 12ஆம் தேதி மலைவாழ் மக்கள் திருமூர்த்தி மலை முதல் குருமலை வரை சாலை அமைக்க அனுமதி வழங்காத உடுமலை வனத்துறை மற்றும் 2006 வன உரிமை சட்டத்தை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டத்தை உடுமலை வனத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.

இந்த நிலையில் அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் 3வது நாளாக மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.



இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில், மாவட்ட வன உரிமை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மலைவாழ் மக்கள் போராட்ட குழுவினர், வனத்துறையினர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் திருமூர்த்திமலை முதல் குருமலை செட்டில்மென்ட் வரை 5.37 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க ஒப்புதல் வழங்கியதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.



பின்னர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற பகுதியில் இனிப்புகள் வழங்கி மலைவாழ் மக்கள் பாரம்பரியமான இசைக்கருவிகள் இசைக்க மலைவாழ் மக்கள் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காத்திருப்பு போராட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்த மழைவாழ் மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. உடுமலையில் மலைவாழ் மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...