நடிகர் விஜய் தொடங்கியுள்ள இரவு நேர பாடசாலை நல்ல விஷயம் - கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வரவேற்பு!

நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ள இரவு நேர பாடசாலை என்பது நல்ல விஷயம் என்றும் அதை வரவேற்பதாகவும், விஜயின் செயலை பாராட்டுகிறேன் எனவும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவை: நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ள இரவு நேர பாடசாலை திட்டத்தை வரவேற்பதாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவை வடகோவை பகுதியில் காமராஜர் சிலைக்கு வானதி சீனிவாசன் கட்சியினருடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



காமராஜரின் ஆட்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஆட்சி. காமராஜர் அன்று செய்த செயலை பாஜக நினைவு கூறுகிறது. காங்கிரஸின் எமர்ஜென்சியால் காமராஜர் மன வேதனைப்பட்டு இறந்தார்.

தமிழகத்தின் கல்வி சூழலால் கல்வி வியாபாரமாக மாறிவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோரின் வருமானத்தில் பெரும் செலவு செய்யும் சூழல் உள்ளது. காமராஜர் முயற்சியில் அஸ்திவாரம் நன்றாக உள்ளது.

கல்வி சுமையாக குடும்பத்திற்கு மாறிவருகிறது. தமிழக அரசு நல்ல கல்வியை தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். உதயநிதி அப்படித்தான் சொன்னார் என்கிறார். உதயநிதி பிரதமர் என்ன பேசினார் என்பதை முழுமையாக கேட்க வேண்டும்.

மோடி சொன்னதை ஹிந்தி தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என தெரிவித்து விட்டு மாற்றிப் பேசுகின்றனர்.

மோடி பேசியதை உதயநிதி ஹிந்தி பண்டிட் வைத்து கேட்டுக் கொள்ள வேண்டும் என கேட்கிறேன். இரவு நேர பாடசாலை விஜய் துவங்கியது நல்ல விஷயம். கல்விக்காக செய்வதை வரவேற்கிறோம். என்ன மாதிரி செயல்படும் என்பதை பார்ப்போம்.யார் சமூகத்திற்காக பங்களித்தாலும் பாராட்டுகிறேன்.

மக்கள் நீதி மய்யம் என்னை கண்டித்து போராட்டம் வைத்துள்ளனர். எம்.எல்.ஏ. பணி என்பது ஒரு புறம். பணியைத் தாண்டி கூட தொகுதியில் வேலை செய்துள்ளேன். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது தொடரும். மருத்துவமனை விவரம் குறித்து மருத்துவர் ஒபினியன் பின்பு தான் தொடரும். எதிர்கட்சிகளின் கூட்டணி அறிவிப்புகள் உறவு நட்பு ஒருபோதும் மீண்டும் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவதை தடுக்க முடியாது.

இவர்கள் தேர்தல் என்று வரும் போது சேர்கின்றனர். சட்டமன்றத்தில் வாக்களிப்பவர்கள் கூட நாடாளுமன்றத் தேர்தல் என்று வரும் பொழுது மோடிக்கு வாக்களிக்கிறார்கள்.

சந்திராயன் 3 இந்தியாவின் பெருமை. சர்வதேச அளவில் மாற்றம். சிறு சிறு நாடுகள் இந்தியாவை அணுகுகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். மிகப்பெரிய மார்க்கெட் இந்தியாவுக்கு உள்ளது.

தக்காளி விலை ஏறி போனதுக்கு மத்திய அமைச்சரை காரணம் காட்டுவது எப்படி பொருத்தமாக இருக்கும். விவசாயிகள் விளைச்சலை உள்ளூர் அரசாங்கம் தான் கவனிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு சரியான இன்புட் கொடுக்கவில்லை. குறைவு என்று வரும் பொழுது மத்திய அரசு என்கிறார்கள்.பஞ்சு விலை உயர்வுக்கு இறக்குமதி வரியை மத்திய அரசு ஏற்கனவே குறைத்துள்ளனர்.

சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுள்ளேன். எங்களுக்கு எல்லா தேர்தலிலும் வெற்றி கிடைக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...