திருப்பூரை சேர்ந்த மனோன்மணி என்ற பெண் ஔவையார் எழுதிய 91 வரிகள் கொண்ட கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடி சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை முயற்சியை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் அமைப்பினர் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளனர்.
திருப்பூர்: ஔவையார் எழுதிய கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடிய திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த மனோன்மணி என்ற பெண் சிறு வயது முதலே சிறிய சிறிய வார்த்தைகளை தலைகீழாக பேசி பல்வேறு நிலைகளில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் தனது அடுத்த கட்ட முயற்சியாக ஔவையார் எழுதி பாடிய கொன்றைவேந்தன் பாடலை முழுவதுமாக தலைகீழாக பாடி சாதனை படைத்துள்ளார்.
461 சொற்களோடு 91 வரிகள் கொண்ட பாடலை மூன்று நிமிடத்திற்குள்ளாக பாடி சாதனை படைத்த மனோன்மணிக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய அமைப்பினர் சான்றிதழ் வழங்கி அங்கீகரித்துள்ளனர்.
இந்த நிகழ்வானது திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள அரசு கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.