எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் - திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு!

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க பெங்களூருவுக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து கோஷங்களை எழுப்பினர்.



திருப்பூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காவிரி பிரச்சனையில் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



மேலும், பெங்களூரு சென்றுள்ள தமிழக முதல்வர் இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பாமல் கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் அரசோடு இணக்கமாக செயல்பட்டு வருவதை கண்டிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



திமுக அரசின் இரட்டை வேடம் மற்றும் அதன் தலைவர்களின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பாஜகவினர் இன்று கருப்பு சட்டை அணிந்துள்ளனர்.

மத்திய அரசில் பாஜக பொறுப்பேற்ற பின்னர் இரு மாநிலங்களுக்கும் தேவையான தண்ணீரை சம பங்கீடாக வழங்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் தமிழகத்திற்கு 177 டி.எம்.சி தண்ணீர் கிடைத்திருக்கிறது.

நடந்து முடிந்த கர்நாடக மாநில தேர்தலில் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். அதற்காக ஒன்பதாயிரம் கோடி ஒதுக்குவோம் என தேர்தல் வாக்குறுதியிலேயே காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்த நிலையில் தமிழக முதல்வர் அதற்கு கண்டனம் தெரிவிக்காமல், இன்றைய தினம் பெங்களூரில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் காவிரி பிரச்சனை குறித்து பேசாமல் கூட்டணி என்ற பெயரில் தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசோடு இணக்கம் காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதே நிலை தொடருமானால் வீதிகளில் இறங்கி பாஜக போராடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...