காய்கறி விலை உயர்வை கண்டித்து கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்!

காய்கறி விலை உயர்வை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தக்காளி, கத்திரிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு காய்கறிகள் விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: காய்கறி விலை உயர்வை கண்டித்து கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சமையலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் காய்கறிகளான தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பருவமழை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காய்கறி விலை உயர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் வலைத்தளவாசிகள் மீம்ஸ் மற்றும் காமெடி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழக அரசு காய்கறி விலையை கட்டுப்படுத்தவும் மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யவும் பல்வேறு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தக்காளி, கத்திரிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...