அடுத்த அமைச்சரவை கூட்டம் திகார் சிறையில் நடக்க வாய்ப்புள்ளது - முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்!

செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை, பொன்முடி மீதான விசாரணை, இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் அடுத்து விசாரணைக்கு உள்ளாக்கப்படலாம். திமுகவின் அடுத்த அமைச்சரவை கூட்டம் மத்திய அரசின் திகார் ஜெயிலில் கூட நடக்க வாய்ப்பிருக்கிறது என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.



திருப்பூர்: திமுகவின் அடுத்த அமைச்சரவை கூட்டம் மத்திய அரசின் திகார் ஜெயிலில் கூட நடக்க வாய்ப்பிருக்கிறது என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.



விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டிக்கும் வகையில் திருப்பூர் குமரன் நினைவகம் அருகே ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் காய்கறி விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில் காய்கறி மாலை அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, கடந்த திமுக ஆட்சி கரண்ட் கட் பிரச்சினையால் கவிழ்ந்தது. இப்போதைய திமுக ஆட்சி கரண்ட் பில் விவகாரத்தில் கவிழும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை, அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை , இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் அடுத்து விசாரணைக்கு உள்ளாக்கப்படலாம். திமுகவின் அடுத்த அமைச்சரவை கூட்டம் மத்திய அரசின் திகார் ஜெயிலில் கூட நடக்க வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எம் எஸ் எம் ஆனந்தன், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...