அண்ணாமலையின் யாத்திரை பொய்யான யாத்திரை - முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள ‘என் மண் என் மக்கள்’ என்ற மக்கள் சந்திப்பு யாத்திரை ஒரு பொய்யான யாத்திரை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் விமர்சித்துள்ளார்.



கோவை: பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் என்ற யாத்திரை ஒரு பொய்யான யாத்திரை என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் விமர்சித்துள்ளார்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாணவர் அமைப்பு சார்பில் தமிழ்நாடு மாணவர் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



இதில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் கலந்து கொண்டு மாணவர் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.



மாணவர் அமைப்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகாந்த் பேசியதாவது,



மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் அதற்கு உரிமை உண்டு. ஆனால் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள யாத்திரையானது ஒரு பொய்யான யாத்திரை அதனால் எந்த பயனும் இருக்காது. அதில் மேற்காட்டுவது அதிகமாக இருக்கும் ஆனால் அதில் எந்தவிதமான பயனும் இருக்காது,

இந்திய வரலாற்றில் முதன்முறையாக பெரிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. கருத்து உடைய கூட்டு இயக்கமாக செயல்பட உள்ள நிலையில் அது வரவேற்க கூடியதாக இருக்கும். கர்நாடகத்தை போன்று தமிழக அரசியலிலும் சிலிண்டரை வைத்து அரசியல் செய்தது போல தமிழகத்திலும் அரசியல் செய்ய உள்ளோம்.

சிலிண்டர் என்பது பாஜக அரசுக்கு எதிரான சின்னம் அது எல்லா மக்களுக்கும் சாத்தியமாக அமையும். 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய தேர்தல் என்பது பிஜேபிக்கும் காங்கிரஸ்க்கும் இடையேயான தேர்தல் இல்லை. இது அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக நின்று பிஜேபியை எதிர்ப்பதற்கான தேர்தல்.

மணிப்பூர் விவகாரம் மக்களை இரண்டாக பிரித்து நடைபெற கூடிய வன்முறை, மாநில அரசாங்கங்களை அடக்கு முறையால் அடக்கி விடலாம் என்று மத்திய அரசு வைத்துள்ள அனைத்து துறைகளையும் மத்திய அரசுக்கு கீழ் உள்ள அரசாங்கங்களுக்கு எதிராக திருப்பு முயற்சி மத்திய அரசு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...