மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து, தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மணிப்பூரில் நடந்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை, கண்டித்து தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மண்டல துணை அமைப்பாளர் ஒண்டிவீரன் கூறியதாவது, பிரதமராக இருக்க மோடிக்கு தகுதி இல்லை. லட்ச கணக்கில் மக்கள் தொகை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடிய வில்லை. பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுக்கிறார்.

மணிப்பூரில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பற்றி மவுனம் காப்பது ஏன். மணிப்பூர் பெண்களுக்கு நடந்த வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை பாதுகாக்க தவறிய மணிப்பூர் மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், ஒரு மாநிலத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாத மோடி உடனடியாக பதவி விலக வேண்டும். என கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இந்நிகழ்சியில், மாவட்ட செயலாளர் காளிமுத்து, தாராபுரம் நகர செயலாளர் தண்டபாணி, மண்டல துணை அமைப்பாளர் ஒண்டி வீரன், மண்டல மாணவர் அணி செயலாளர் விடியல் தில்லை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட தலைவர் ரவி உள்ளிட்ட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...