மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து, தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மணிப்பூரில் நடந்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை, கண்டித்து தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மண்டல துணை அமைப்பாளர் ஒண்டிவீரன் கூறியதாவது, பிரதமராக இருக்க மோடிக்கு தகுதி இல்லை. லட்ச கணக்கில் மக்கள் தொகை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடிய வில்லை. பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுக்கிறார்.

மணிப்பூரில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பற்றி மவுனம் காப்பது ஏன். மணிப்பூர் பெண்களுக்கு நடந்த வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை பாதுகாக்க தவறிய மணிப்பூர் மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், ஒரு மாநிலத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாத மோடி உடனடியாக பதவி விலக வேண்டும். என கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இந்நிகழ்சியில், மாவட்ட செயலாளர் காளிமுத்து, தாராபுரம் நகர செயலாளர் தண்டபாணி, மண்டல துணை அமைப்பாளர் ஒண்டி வீரன், மண்டல மாணவர் அணி செயலாளர் விடியல் தில்லை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட தலைவர் ரவி உள்ளிட்ட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...