கோவையில் பொருத்தப்பட்ட 6 தானியங்கி வேக அளவீடு கருவிகள் - சேவையை தொடங்கி வைத்த காவல் ஆணையர்!

கோவை மாநகரில் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் அவினாசி சாலை, சரவணம்பட்டி மற்றும் குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் முதல் முறையாக 6 தானியங்கி வேக அளவீடு கருவிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதன் சேவையை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.


கோவை: கோவையில் மாநகர காவல்துறை சார்பில் 3 இடங்களில் அமைக்கப்பட்ட 6 தானியங்கி வேக அளவீடு கருவிகளின் சேவையை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.



கோவை மாநகரில் முதல் முறையாக அவினாசி சாலை, சரவணம்பட்டி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் போக்குவரத்து விதியை மீறி வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய தானியங்கி வேக அளவீடு கருவி பொருத்தப்பட்டுள்ளது.



3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 6 வேக அளவீடு கருவி மூலம் வேகமாக இயக்கப்படும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, அபராதமும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.



இந்த மூன்று இடங்களில் உள்ள தானியங்கி வேக அளவீடு கருவிகள், கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு துறையின் கட்டுப்பாட்டில் இயங்க உள்ளது.



தானியங்கி வேக கருவி மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டிச் செல்லும் வாகனங்கள் கண்டறியப்படும்.

இதனையடுத்து அந்த வாகன உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் அபராத சலான் அனுப்பி வைப்பதோடு, உடனடியாக அபராதத்தை செலுத்த வலியுறுத்தப்பட உள்ளது. விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு மாநகர போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...