கோவையில் பொருத்தப்பட்ட 6 தானியங்கி வேக அளவீடு கருவிகள் - சேவையை தொடங்கி வைத்த காவல் ஆணையர்!

கோவை மாநகரில் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் அவினாசி சாலை, சரவணம்பட்டி மற்றும் குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் முதல் முறையாக 6 தானியங்கி வேக அளவீடு கருவிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதன் சேவையை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.


கோவை: கோவையில் மாநகர காவல்துறை சார்பில் 3 இடங்களில் அமைக்கப்பட்ட 6 தானியங்கி வேக அளவீடு கருவிகளின் சேவையை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.



கோவை மாநகரில் முதல் முறையாக அவினாசி சாலை, சரவணம்பட்டி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் போக்குவரத்து விதியை மீறி வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய தானியங்கி வேக அளவீடு கருவி பொருத்தப்பட்டுள்ளது.



3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 6 வேக அளவீடு கருவி மூலம் வேகமாக இயக்கப்படும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, அபராதமும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.



இந்த மூன்று இடங்களில் உள்ள தானியங்கி வேக அளவீடு கருவிகள், கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு துறையின் கட்டுப்பாட்டில் இயங்க உள்ளது.



தானியங்கி வேக கருவி மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டிச் செல்லும் வாகனங்கள் கண்டறியப்படும்.

இதனையடுத்து அந்த வாகன உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் அபராத சலான் அனுப்பி வைப்பதோடு, உடனடியாக அபராதத்தை செலுத்த வலியுறுத்தப்பட உள்ளது. விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு மாநகர போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...