தாராபுரத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு - அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான 13 ஏக்கர் 12 சென்ட் நிலங்கள் நீதிமன்ற உத்தரவின் படி மீட்கப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் நீதிமன்ற உத்தரவின் படி மீட்கப்பட்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தாராபுரம் அருள்மிகு காடு அனுமந்தராயர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான 10.98 ஏக்கர் நன்செய் நிலம் தாமாக முன் வந்து ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல், கோனாபுரம் அருள்மிகு லட்சுமி நாராயணசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 2.14 ஏக்கர் நன்செய் நிலம், தனி நபரிடம் இருந்தது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட வருவாய் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.



இந்த வழக்கில் கோயிலுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமர துரை உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் ஜெய தேவி தலைமையில், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டது.



இதன்படி, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 ஏக்கர் 12 சென்ட் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலம் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் மகேஸ்வரன், திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் குருராஜன், தாராபுரம் சரக ஆய்வாளர் ஆதிரை, செயல் அலுவலர் மல்லிகா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் இணைந்து தாராபுரம் நகரில் 13 ஏக்கர் 12 சென்ட் நிலம் திருக்கோவிலுக்கு சுவாதீனம் பெறப்பட்டது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...