கோவை ‘இதயங்கள்’ அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது - சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கினார்!

தமிழ்நாடு முழுவதும் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 1,200 ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் கோவையை சேர்ந்த இதயங்கள் அறக்கட்டளைக்கு சிறந்த மருத்துவ சேவையை பாராட்டி, சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது வழங்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது கோவையில் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமையில் செயல்படும் 'இதயங்கள் அறக்கட்டளைக்கு' வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் 2023-ம் ஆண்டு சிறந்த மருத்துவ சேவைக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் ஜூலை 27ஆம் தேதி நடைபெற்றது.

தமிழகத்தில் சிறந்த மருத்துவ சேவைக்காக கோவையில் செயல்படும் இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதனுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் விருது வழங்கி பாராட்டினார்.

மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமையின் கீழ் செயல்படும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1,200 ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு உயர்தர இன்சுலின், சர்க்கரை பார்க்கும் குளுக்கோமீட்டர் சாதனம், இன்சுலின் பம்ப், வலி குறைவான 4 எம்எம் ஊசி, குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல உதவிகள் கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது, கோவையில் தொடங்கிய இதயங்களின் பணி இன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பல அரசு மருத்துவமனைகள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்துடன் (தமிழ்நாடு பிரிவு) இணைந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட காரணமாக செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள விருது இதயங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கமான "தமிழகத்தில் முதல் வகை சர்க்கரை குறைபாடு கொண்ட ஒரு குழந்தை கூட தரமான மருத்துவமின்றி இன்னல் படக்கூடாது" என்ற உயர் எண்ணத்திற்கு ஒரு ஊன்று கோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முதல் வகை சர்க்கரை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களை சேர்ந்த 20 வயதுக்குட்பட்டவர்கள் உதவி பெற, இதயங்கள் அறக்கட்டளையை 9042858882 என்ற எண்ணிலும், இதயங்களின் வலைத்தளம் www.idhayangal.org -லும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...