மான் கி பாத் நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த ஓவியரை பாராட்டிய பிரதமர் மோடி!

நேற்று ஒளிபரப்பான மான் கி பாத் நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் சார்ந்து பேசிய பிரதமர் மோடி, அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த ஓவிய ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு 300க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ள கோவையை சேர்ந்த ஓவியர் சுரேஷின் முயற்சியை பாராட்டியுள்ளார்.



கோவை: மனதின் குரல் நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த ஓவியர் சுரேஷின், வரும் உயிரினங்கள் குறித்த ஓவிய ஆவண முயற்சியை பிரதமர் பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன் கி பாத் - மனதின் குரல்' எனும் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்ட 103வது மனதின் குரல் நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் சார்ந்து பிரதமர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஓவியர் ராகவன் சுரேஷ் செய்து வரும் 'அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த ஓவிய ஆவண' முயற்சி குறித்து குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த தன்னுடைய ஓவிய முயற்சி குறித்து பிரதமர், மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருப்பது, தனக்கும் தனது முயற்சிக்குமான மிகப் பெரிய அங்கீகாரம் என தெரிவிக்கிறார் ஓவியர் ராகவன் சுரேஷ்.



59 வயதாகும் இவர், பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஓவியராக பணிபுரிந்து வருகிறார். ஓய்வு நேரத்தில் அழியும் தருவாயில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களை தத்துரூபமான ஓவியமாக வரைந்து வருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 350 க்கும் மேற்பட்ட ஓவியங்களை இவர் வரைந்துள்ளார். குறிப்பாக, இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களை மிகத் துல்லியமாக உரிய தகவல்களோடு ஓவியமாக வரைந்து ஆவணப்படுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், தாவரங்கள், பறவைகள், விலங்குகள் உட்பட அனைத்து இயற்கை வளங்களையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த ஓவியங்களை வரைந்துள்ளார்.

மேலும், அடுத்த தலைமுறையினருக்கு அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஓவியங்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் காட்சிப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...