கொடநாடு வழக்கை துரிதமாக விசாரிக்க வேண்டும் - அமமுக, ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்!

கோவை செஞ்சிலுவை சங்கம் அருகேயுள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி இரு அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கோவையில் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை செஞ்சிலுவை சங்கம் அருகேயுள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரு அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், கொடநாடு உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என உடலில் கருப்பு சாயம் பூசி, அதில் வெள்ளை எழுத்துகளில் எழுதி வந்தனர்.



அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அமர வைத்தனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் அழகு மருதுராஜ் பேசியதாவது,



திமுக தலைவர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சொன்னார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 90 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். வாயால் மட்டும் சொல்லவில்லை, திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் சொல்லப்பட்டது.

ஆனால் இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது, விசாரணை மாறுகின்றதே தவிர விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தனியார் தொலைக்காட்சி கொடநாடு வழக்கு குறித்து புலனாய்வு செய்தியை ஒளிபரப்பியது. அதில் குற்றவாளிகளை கேரளாவில் சந்தித்த போது எங்களை சந்தித்து ஒரு நபர் பேரம் பேசினார், காரிலே வந்து பணம் தந்தார் என்று அவர்கள் சொன்னார்கள்.

பல புகைப்படங்களை காட்டிய பொழுதும் மறுத்த அவர்கள், சேலம் இளங்கோவின் புகைப்படத்தை காட்டிய பொழுது அவர் தான் தங்களை சந்தித்தாக குற்றவாளிகள் சொன்னார்கள். அப்படிச் சொல்லப்பட்ட 20 நாட்களில் சேலம் இளங்கோவனுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் பதவி, எடப்பாடி வகித்து வந்த அந்த பதவி கொடுக்கப்பட்டது.

இதே போல சஜீவன் என்பவருக்கு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இவை அனைத்தையும் ஒன்றாக , எல்லா பக்கமும் பார்த்தால் சந்தேகம் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி வருகிறது.

கொடநாடு குறித்து தேர்தல் வாக்குறுதி கொடுத்து 2.5 வருடங்கள் ஆகிவிட்டது, ஏன் இது வரை குற்றவாளிகளை தண்டிக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி ஒரு முறை கூட தன் வாயை திறந்து இது வரை திமுக அரசை கேட்கவில்லை எனவும்,அதிமுக சார்பில் 14 முறை திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ஆனால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்கவேண்டும் என ஏன் அதிமுக கேட்கவில்லை. எடப்பாடியுடன் இருப்பவர்கள் கொடநாடு என்ற பெயரை சொல்வது இல்லை. நாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தமிழக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.

அதிமுக கைது செய்தவர்களை திமுக பிணையில் எடுக்கின்றது. மொத்த விபரங்களையும் திமுக தெரிந்துகொண்டு, எடப்பாடியை பிணைகைதியாக, அரசியல் ரீதியாக வைத்துக்கொண்டு உள்ளடி வேலை பார்க்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்ட கருப்பு பெயிண்ட் அடித்து வந்த நான்கு பேரையும் போலீசார் விடுவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...