பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் குப்பையில் தீயிட்டு எரிப்பு - அதிர்ச்சி!

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கும் மனுக்கள், உத்தரவுகள் சீல் வைக்கப்பட்டு, கையெழுத்திடப்பட்ட நிலையில், அலுவலகத்தின் பின்புறம் தீயிட்டு எரிக்கப்பட்டு கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் குப்பையில் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், 20 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய பல்லடம் தாலுக்கா வட்டாட்சியராக ஜெய்சிங் சிவக்குமார் என்பவர் உள்ளார். மேலும் பொதுமக்கள் அன்றாடம் அளிக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மனுதாரருக்குறிய தீர்வு காணப்படுவது வழக்கம்.



இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கும் மனுக்கள், உத்தரவுகள் சீல் வைக்கப்பட்டு, கையெழுத்திடப்பட்டவை அலுவலக பின்புறமாக குப்பையில் எரிக்கப்பட்டு கிடந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



இந்நிலையில் துணை ஆட்சியர் சுதன் ஜெய் நாராயணன் தலைமையில் ஆய்வு கூட்டம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருந்தது.



இதனையடுத்து கூட்டம் முடிந்து வெளியே வந்த துணை ஆட்சியரிடம் குப்பையில் கிடந்த மனுக்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பின்னர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இச்சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...