காருக்குள் இருந்த கொம்பேரி மூக்கன் பாம்பு - லாவகமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு!

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் பாம்பு இருப்பதை கண்ட ஓட்டுனர், பாம்பு பிடி வீரர் உதவியுடன் கொம்பேரிமூக்கன் பாம்பை பத்திரமாக பிடித்து பாட்டிலில் அடைத்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


கோவை: பாப்பநாயக்கன் பாளையம் அருகே காருக்குள் புகுந்த கொம்பேரி மூக்கன் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவையில் பாப்பநாயக்கன் பாளையம் பகுதி சேர்ந்த ஒருவர் தனது காரை சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். சாலையில் கார் பயணித்துக் கொண்டிருந்த பொழுது, மழை நீர் வடிக்கும் வைப்பர் மீது பாம்பு ஒன்று எட்டிப் பார்த்து உள்ளது.

இதைப் பார்த்த அந்த காரின் உரிமையாளர், சிங்காநல்லூரில் உள்ள ஷோரூம் ஒன்றுக்கு ஓட்டிச் சென்று இருக்கின்றார். ஷோரூமில் இருந்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் தரப்பட்டது.

வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பைச் சார்ந்த பாம்பு பிடி வீரரும், வழக்கறிஞருமான சித்ரன் விரைந்து சென்று காரில் வைப்பர் பகுதியில் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக பிடித்தார். அந்த பாம்பு கொம்பேரி மூக்கன் பாம்பு என்றும் பிடிக்கப்பட்ட பாம்பை அவர் பாட்டிலில் அடைத்து வனத்துறையிடம் பாதுகாப்பாக ஒப்ப்படைத்தார்.

வனத்துறையினர் அதனை வனபகுதியில் விடுவித்தனர். மேலும் குறிப்பாக காரில் பாம்பு புகுந்து விட்டால் உடனடியாக தண்ணீர் பீச்சு அடிப்பதோ அல்லது மண்ணெண்ணெய் ஊற்றி வெளியே வரவைக்க முயற்சி செய்வதோ கூடாது.

பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அவர்கள் விரைந்து சென்று பாம்பை பாதுகாப்பாக மீட்பார்கள் என்றும் காருக்குள் புகுந்த பாம்பை விரட்டும் நோக்கில் பொதுமக்கள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என வன உயிரியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...