முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேரு விளையாட்டு அரங்கில் இருந்து காந்திபுரம் அண்ணா சிலை வரை கோவை மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. இதனை வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.
கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கோவையில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.
முன்னாள் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் ஐந்தாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து காந்திபுரம் அண்ணா சிலை வரை ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பில் மாபெரும் அமைதி பேரணி நடைபெற்றது.
மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணியை, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
இதில் திமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மாநகராட்சி மேயர் துணை மேயர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.