திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உடுமலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டு, மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர்: உடுமலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் 2000க்கும் மேற்பட்டோர் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கி மத்திய பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலமானது, பழைய பஸ் நிலையம் பைபாஸ் ரோடு வழியாக வந்து மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தபட்டது.
இந்த அமைதி பேரணியில் உடுமலை நகராட்சி முன்னாள் தலைவரும், நகர செயலாளருமான வேலுச்சாமி, நகராட்சி தலைவர் மத்தீன், குடிமங்கலம் வடக்கு ஓன்றிய செயலாளர் அணிக்கடவு கிரி, வழக்கறிஞர் செந்தில்குமார், யூ.என்.பி.குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் முபாரக் அலி உட்பட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.