முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி உடுமலையில் திமுக சார்பில் அமைதி ஊர்வலம்!

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உடுமலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டு, மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: உடுமலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் 2000க்கும் மேற்பட்டோர் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கி மத்திய பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.



திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலமானது, பழைய பஸ் நிலையம் பைபாஸ் ரோடு வழியாக வந்து மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தபட்டது.



இந்த அமைதி பேரணியில் உடுமலை நகராட்சி முன்னாள் தலைவரும், நகர செயலாளருமான வேலுச்சாமி, நகராட்சி தலைவர் மத்தீன், குடிமங்கலம் வடக்கு ஓன்றிய செயலாளர் அணிக்கடவு கிரி, வழக்கறிஞர் செந்தில்குமார், யூ.என்.பி.குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் முபாரக் அலி உட்பட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...