துடியலூர் அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர் கைது!

துடியலூர் - வெள்ளக்கிணர் சாலையில் ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த சசிக்குமார் என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஜீவானந்தம் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: துடியலூர் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார், இவர் தற்போது கோவை துடியலூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று உணவு சாப்பிடுவதற்காக துடியலூர் வெள்ளக்கிணர் சாலையில் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். சசிக்குமார் பணம் தர மறுக்கவே கெட்ட வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சசிக்குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் கத்தியை காட்டி மிரட்டியதாக நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...