துடியலூர் அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர் கைது!

துடியலூர் - வெள்ளக்கிணர் சாலையில் ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த சசிக்குமார் என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஜீவானந்தம் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: துடியலூர் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார், இவர் தற்போது கோவை துடியலூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று உணவு சாப்பிடுவதற்காக துடியலூர் வெள்ளக்கிணர் சாலையில் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். சசிக்குமார் பணம் தர மறுக்கவே கெட்ட வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சசிக்குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் கத்தியை காட்டி மிரட்டியதாக நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...