திருப்பூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து பேரனுடன் சென்ற மூதாட்டி வேகத்தடையில் ஏறி இறங்கும் போது கீழே விழுந்து உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி சரோஜா (வயது 60). கைத்தறி தொழிலாளி. கடந்த 7-ந் தேதி சரோஜா தனது பேரன் யோககுமாருடன் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
குண்டடம் பஸ் நிறுத்தம் முன்பு சென்றபோது அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது மோட்டார்சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த சரோஜா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி சரோஜா (வயது 60). கைத்தறி தொழிலாளி. கடந்த 7-ந் தேதி சரோஜா தனது பேரன் யோககுமாருடன் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
குண்டடம் பஸ் நிறுத்தம் முன்பு சென்றபோது அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது மோட்டார்சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த சரோஜா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.