நுழைவாயில் பணிகளை நிறுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் மாமன்ற உறுப்பினர்கள் நேரில் முறையீடு

கோவை சத்தி சாலையில் FCI கிடங்கிற்கு செல்லும் வழியில் கட்டப்பட்டு வரும் நுழைவாயில் பணிகளை நிறுத்திட வலியுறுத்தி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல மக்கள் பயன்படுத்தி வரும்நிலையில், நுழைவாயில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் அளவிற்கு சுற்றி செல்ல வேண்டி இருக்கும். இதனால் நுழைவாயில் பணிகளை நிறுத்த வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை சத்தி சாலையில் FCI கிடங்கிற்கு செல்லும் வழியில் கட்டப்பட்டு வரும் நுழைவாயில் பணிகளை நிறுத்திட வலியுறுத்தி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் சத்தி சாலை பாரதி நகர் அருகே இந்திய உணவுக் கழகத்திற்கு சொந்தமான உணவு கிடங்கிற்கு செல்ல சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரப்பாதை உள்ள நிலையில் பாதையை சீரமைக்கும் பணிகளை இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது எனவும் அதன் ஒரு பகுதியாக சத்தி சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அந்தப் பாதையில் முடியும் இடத்தில் நுழைவாயில் ஒன்று அமைத்து அதில் உணவுக் கழக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வாயில் கதவு அமைய உள்ளதாக அறிவதாகவும், அந்தப் பாதையை கோவை மாநகராட்சியின் 20, 26, 28வது வார்டு பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தி வரும் நிலையில் நுழைவாயில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் அளவிற்கு சுற்றி செல்ல வேண்டி இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

எனவே நுழைவாயில் பணிகளை நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் அப்பாதையை செப்பனிட்ட பிறகு கடந்த காலங்களை போலவே பொதுமக்கள் பயன்படுத்தும் விதத்தில் உரிய ஏற்பாடுகளை உணவுக் கழக நிர்வாகம் செய்திட மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.



இந்த மனுவை 20வது வார்டு கவுன்சிலர் மரியராஜ், 26 வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மற்றும் 28 வது வார்டு கவுன்சிலர் கண்ணகி ஜோதிபாசு ஆகியோர் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...