நுழைவாயில் பணிகளை நிறுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் மாமன்ற உறுப்பினர்கள் நேரில் முறையீடு

கோவை சத்தி சாலையில் FCI கிடங்கிற்கு செல்லும் வழியில் கட்டப்பட்டு வரும் நுழைவாயில் பணிகளை நிறுத்திட வலியுறுத்தி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல மக்கள் பயன்படுத்தி வரும்நிலையில், நுழைவாயில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் அளவிற்கு சுற்றி செல்ல வேண்டி இருக்கும். இதனால் நுழைவாயில் பணிகளை நிறுத்த வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை சத்தி சாலையில் FCI கிடங்கிற்கு செல்லும் வழியில் கட்டப்பட்டு வரும் நுழைவாயில் பணிகளை நிறுத்திட வலியுறுத்தி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் சத்தி சாலை பாரதி நகர் அருகே இந்திய உணவுக் கழகத்திற்கு சொந்தமான உணவு கிடங்கிற்கு செல்ல சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரப்பாதை உள்ள நிலையில் பாதையை சீரமைக்கும் பணிகளை இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது எனவும் அதன் ஒரு பகுதியாக சத்தி சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அந்தப் பாதையில் முடியும் இடத்தில் நுழைவாயில் ஒன்று அமைத்து அதில் உணவுக் கழக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வாயில் கதவு அமைய உள்ளதாக அறிவதாகவும், அந்தப் பாதையை கோவை மாநகராட்சியின் 20, 26, 28வது வார்டு பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தி வரும் நிலையில் நுழைவாயில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் அளவிற்கு சுற்றி செல்ல வேண்டி இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

எனவே நுழைவாயில் பணிகளை நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் அப்பாதையை செப்பனிட்ட பிறகு கடந்த காலங்களை போலவே பொதுமக்கள் பயன்படுத்தும் விதத்தில் உரிய ஏற்பாடுகளை உணவுக் கழக நிர்வாகம் செய்திட மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.



இந்த மனுவை 20வது வார்டு கவுன்சிலர் மரியராஜ், 26 வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மற்றும் 28 வது வார்டு கவுன்சிலர் கண்ணகி ஜோதிபாசு ஆகியோர் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...