இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘சக்தி சூப்பர் பெண்’ என்ற புதிய திட்டத்தின் பதாகை வெளியீடு!

கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'சக்தி சூப்பர் பெண்' (SHAKTHI SUPER SHE) என்ற திட்டத்தின் பதாகையை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் வெளியிட்டார்.



கோவை: 'சக்தி சூப்பர் பெண்' என்ற திட்டத்தின் பதாகையை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் வெளியிட்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள "சக்தி சூப்பர் பெண்" (SHAKTHI SUPER SHE) என்ற திட்டத்தின் பதாகை கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.



இந்த நிகழ்வில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் பதாகை வெளியிட்டார்.



மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் காயத்ரி ராஜ முரளி சாந்தாமணி பச்சைமுத்து முன்னிலையில் வைத்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,



காங்கிரஸ் கட்சியில் பெண்களின் ஆளுமை திறனை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்களின் தலைமை பண்பை மேம்படுத்தும் விதமாகவும், சூப்பர் சக்தி சூப்பர் பெண் என்ற இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள மகளிர் மட்டுமின்றி கட்சியில் இல்லாத பெண்களும் இணையலாம்.

இந்நிகழ்ச்சியில் தேசிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...