சோமையனூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது - ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்!

கணுவாய் அடுத்த சோமையனூர் பகுதியில் சுற்றித்திரிந்த கஞ்சா விற்பனையாளர் ராஜகணேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்த தடாகம் போலீசார், அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கணுவாய் அடுத்த சோமையனூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாரயணன் போதைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்.

இந்த நிலையில் கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் காலவர்கள் கணுவாய் அருகே சோமையனூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் விருதுநகரை சேர்ந்த ராஜகணேஷ் என்பதும் கோவை சரவணம்பட்டியில் தங்கி கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது வீட்டை சோதனையிட்ட போலீசார் அங்கிருந்து, சுமார் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த தடாகம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...