சுதந்திர தின விழா கொண்டாட்டம் - வ.உ.சி மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றினார் மாவட்ட ஆட்சியர்

கோவையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் மூவர்ண கொடியை ஏற்றி, காவல்துறை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழா கோலாகலமா கொண்டாடப்பட்டது.



கோவை: வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பல்வேறுதுறைகளில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



சுதந்திர தினத்தை ஒட்டி கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



அதன்படி, கோவை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் - 36 பேர், கோவை மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் - 73 பேர் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் - 153 பேர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



பின்னர் காந்திமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி‌, அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டத்தைச் சேர்ந்த தேசப்பற்றாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...