திருப்பூரில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சால்வை அணிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மரியாதை செய்தார். பின்னர் தான் பயின்ற பள்ளியின் ஆசிரியரின் காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார்.
திருப்பூர்: சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியதை செலுத்திய மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரி சாலையில் உள்ள சிக்கன்னா அரசு கலைக்கல்லூரியில கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.
சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பல்வேறு துறைகளின் சார்பில் 34,36,633 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தான் படித்த பள்ளியின் ஆசிரியருக்கு சால்வை அணிவித்து காலில் விழுந்து ஆசி பெற்றார்.
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சுதந்திர தின விழாவில் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தந்தையும், குணச்சித்திர நடிகருமான சின்னி ஜெயந்த் கலந்து கொண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.