தாராபுரம் அருகே கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காத ஊராட்சி தலைவர் - அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பங்கேற்காததை கண்டித்து பொதுமக்கள் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டம் தொடங்கிய 10 நிமிடத்தில் முடிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பங்கேற்காததை கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் எம்.பி.சாமி காலனி பூங்காவில் நடைபெற்றது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு காலை 11 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து காத்திருந்தனர்.



ஆனால் கவுண்டச்சி புதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி திடீரென வரவில்லை என தெரிவித்தார். இதனால் கூட்டம் நடந்த வந்த வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி துறை கல்வித்துறை அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தனர்.

அப்போது பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் குறைகளை தெரிவித்தனர். கடந்த இரண்டு கூட்டங்களை ஊராட்சி மன்ற தலைவர் செல்வி வேண்டும் என்று புறக்கணித்ததாக கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.



ஊராட்சி மன்ற தலைவர் செல்வியை கண்டித்து பொதுமக்கள் எழுந்து நின்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களிலேயே முடிவடைந்தது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...