விவசாய நிலங்களை கையகப்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு - மொட்டை அடித்து ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்

விவசாய நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படும் நடவடிக்கையை கண்டித்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக விவசாயிகள் மொட்டை அடித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்தாவிட்டால், சென்னையில் உள்ள தலைமை செயலத்தை முற்றுகையிடப்போவதாக தமிழ அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசால் 1963ஆம் ஆண்டு சிறு இனாம்கள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு அமல்படுத்தப்பட்டு உழவர்கள், வீடு மனை உரிமையாளர்களின் உரிமை ஆக்கப்பட்ட இடம் ஆகிய நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையும் , வக்பு வாரியமும் தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை சட்டவிரோதமாக அபகரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சில பகுதிகளில் விவசாயம் செய்து வரும் நிலங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இணாம் விவசாயிகள், குத்தகையாளர்கள் மற்றும் வீடு மனை உரிமையாளர்கள் இயக்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் உடமைகளுடன் தொடர்பு முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசு இதனை கண்டு கொள்ளாவிடில் விரைவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.



போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்கள் மொட்டை அடித்தும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் கோரிக்கைகளை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து மாலை வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்திருந்த நிலையில் குமரன் நினைவகத்தின் நிழலில் நின்ற விவசாயிகளை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயற்சித்தபோது விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...