தாராபுரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் கயல்விழி நேரில் ஆய்வு - சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் விசாரிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தாராபுரம் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவசர சிகிச்சை பரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு, இரத்த வங்கி பிரிவு உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.



திருப்பூர்: தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை விரிவாக்க மையம் கட்டிட பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழி, கட்டிட வேலைகள் விரைவாக முடித்து தருமாறு பொறியாளரிடம் கேட்டுகொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க படுகின்றதா? என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



அரசு மருத்துவ மனையில் உள்ள அவசர சிகிச்சை பரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு, இரத்த வங்கி பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு உள்ள நோயாளிகளிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.



மேலும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை விரிவாக்க மையம் கட்டிட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.



கட்டிட பணியில் உள்ள பொறியாளரிடம் கட்டிட வேலைகள் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார். கட்டிடம் விரைவாகவும் உறுதியாகவும் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...