தாராபுரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் கயல்விழி நேரில் ஆய்வு - சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் விசாரிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தாராபுரம் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவசர சிகிச்சை பரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு, இரத்த வங்கி பிரிவு உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.



திருப்பூர்: தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை விரிவாக்க மையம் கட்டிட பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழி, கட்டிட வேலைகள் விரைவாக முடித்து தருமாறு பொறியாளரிடம் கேட்டுகொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க படுகின்றதா? என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



அரசு மருத்துவ மனையில் உள்ள அவசர சிகிச்சை பரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு, இரத்த வங்கி பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு உள்ள நோயாளிகளிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.



மேலும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை விரிவாக்க மையம் கட்டிட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.



கட்டிட பணியில் உள்ள பொறியாளரிடம் கட்டிட வேலைகள் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார். கட்டிடம் விரைவாகவும் உறுதியாகவும் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...