கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் இந்திய கார் வகை பிரிவு நாளை திறப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கார்களுக்காக சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபலமடைந்த கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இது பொதுமக்கள் பார்வைக்காக நாளை (ஆக.18) திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு.



கோவை: கோவையில் உள்ள ஜிடி அருங்காட்சியகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய கார்கள் பிரிவு நாளை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.

கோவையில் ஜிடி கார் மியூசியம் 2015 ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. இதற்கு இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைத்து பொதுமக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்களின் நல்லாதரவையடுத்து, இந்த அருங்காட்சியகம் தொடர்ந்து வாகனங்களின் சேகரிப்பை சேர்த்து வருகிறது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பின்னுாட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், தற்போது நாடு சுதந்திரமடைந்த 1947ம் ஆண்டு முதல் இந்திய வாகனத்துறையின் சாதனைகளை விளக்கும் வகையில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்திய கார் பிரிவு, 10,500 சதுர அடி பரப்பளவில் 40 கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



இவை, ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபலம் அடைந்தவை.



இவை, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ், ஸ்டேன்டேர்டு மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் டெம்போ, சிபானி ஆட்டோமொபைல்ஸ், மாருதி உத்யோக், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்பாகும். இவற்றின் தயாரிப்பின் அடையாளங்களாக இவை திகழ்கின்றன.



இங்கு வைக்கப்பட்டுள்ள பல கார்கள், மிகவும் கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டவை, இன்னும் பல கார்கள் அன்பளிப்பாக கிடைத்தவை. இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழிலின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் மக்களுக்காக கார்களை தயாரிக்க மேற்கெள்ளப்பட்ட முயற்சிகளை விளக்குவதாக இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.



அருங்காட்சியகத்தின் இந்த சிறப்பு பிரிவு, 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 2023 ஆகஸ்ட் 18ம் தேதி காலை 9.00 மணி அளவில் பொதுமக்களுக்காக திறக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...