கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன் அண்ணாமலையின் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது.


கோவை: தமிழக அரசியலில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கோவையில், பா.ஜ.க மையக்குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலைஆதரவு போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இந்த கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், தற்போது உயர்கல்விக்காக லண்டனில் தங்கி இருக்கும் அண்ணாமலை நேரடியாக பங்கேற்காத சூழலிலும், அவரது தீவிர ஆதரவாளர்கள் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த போஸ்டர்களில் அண்ணாமலையின் புகைப்படத்துடன், “Fearless Minds Have No Limits” — அதாவது “பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை” என்ற ஆங்கில வாசகம் இடம்பெற்றுள்ளது. அவிநாசி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும், “Army of Dheeran Annamalai” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள், கோவை அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாத நேரத்திலும், அவரது ஆதரவாளர்கள் நகரம் முழுவதும் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டி தங்களது பலத்தை வெளிப்படுத்தியிருப்பது, பா.ஜ.க உள்கட்சிக்குள் புதிய அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகிறதா என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...