கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச் சென்ற 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


கோவை: தென்மேற்கு பருவமழையால் மீண்டும் பசுமை போர்த்தியுள்ள கோவை மாவட்ட வனப்பகுதிகளில், காட்டு யானைகள் தங்களது இயற்கை வாழ்விடங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மாங்கரை வனச்சரகத்தில் குட்டிகளுடன் அணிவகுத்துச் சென்ற 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் கோடை வெப்பம் காரணமாக காடுகளுக்குள் உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதிகளை விட்டு வெளியேறி, சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் விளைவித்து வந்தன.

ஆனால், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மீண்டும் பசுமையடைந்துள்ளன. வனப்பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பியதால், யானைகள் மீண்டும் தங்களது இயற்கை வாழ்விடங்களுக்குத் திரும்பி வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக, தமிழக–கேரள எல்லையில் உள்ள தடாகம் அருகேயுள்ள மாங்கரை வனச்சரகத்தில், 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று உலா வந்தது. கூட்டத்தில் இருந்த பெண் யானைகள், குட்டி யானைகளை தங்களுக்கு நடுவில் பாதுகாப்பாக வைத்தபடி ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன.

இந்த மனம் கவரும் காட்சியை அப்பகுதியில் இருந்த இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இயற்கை சூழலில் குட்டி யானைகளை அரவணைத்தபடி ஒழுங்காக நகரும் யானைக் கூட்டத்தின் இந்த அரிய வீடியோ தற்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...