தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச் சென்ற 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கோவை: தென்மேற்கு பருவமழையால் மீண்டும் பசுமை போர்த்தியுள்ள கோவை மாவட்ட வனப்பகுதிகளில், காட்டு யானைகள் தங்களது இயற்கை வாழ்விடங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மாங்கரை வனச்சரகத்தில் குட்டிகளுடன் அணிவகுத்துச் சென்ற 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் கோடை வெப்பம் காரணமாக காடுகளுக்குள் உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதிகளை விட்டு வெளியேறி, சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் விளைவித்து வந்தன.
ஆனால், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மீண்டும் பசுமையடைந்துள்ளன. வனப்பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பியதால், யானைகள் மீண்டும் தங்களது இயற்கை வாழ்விடங்களுக்குத் திரும்பி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தமிழக–கேரள எல்லையில் உள்ள தடாகம் அருகேயுள்ள மாங்கரை வனச்சரகத்தில், 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று உலா வந்தது. கூட்டத்தில் இருந்த பெண் யானைகள், குட்டி யானைகளை தங்களுக்கு நடுவில் பாதுகாப்பாக வைத்தபடி ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன.
இந்த மனம் கவரும் காட்சியை அப்பகுதியில் இருந்த இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இயற்கை சூழலில் குட்டி யானைகளை அரவணைத்தபடி ஒழுங்காக நகரும் யானைக் கூட்டத்தின் இந்த அரிய வீடியோ தற்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் கோடை வெப்பம் காரணமாக காடுகளுக்குள் உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதிகளை விட்டு வெளியேறி, சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் விளைவித்து வந்தன.
ஆனால், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மீண்டும் பசுமையடைந்துள்ளன. வனப்பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பியதால், யானைகள் மீண்டும் தங்களது இயற்கை வாழ்விடங்களுக்குத் திரும்பி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தமிழக–கேரள எல்லையில் உள்ள தடாகம் அருகேயுள்ள மாங்கரை வனச்சரகத்தில், 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று உலா வந்தது. கூட்டத்தில் இருந்த பெண் யானைகள், குட்டி யானைகளை தங்களுக்கு நடுவில் பாதுகாப்பாக வைத்தபடி ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன.
இந்த மனம் கவரும் காட்சியை அப்பகுதியில் இருந்த இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இயற்கை சூழலில் குட்டி யானைகளை அரவணைத்தபடி ஒழுங்காக நகரும் யானைக் கூட்டத்தின் இந்த அரிய வீடியோ தற்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.