தாராபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கயல்விழி நேரில் ஆய்வு!

வரும் 21ஆம் தேதி தாராபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதையொட்டி, விழா ஏற்பாடுகள் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கோவில் நிர்வாகத்துடன் போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: தாராபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்ச கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய காவல் நிலைய வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு தாராபுரம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராம மக்கள் வருகை தந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால் கோவிலில் பராமரிப்பு மற்றும் மராமத்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



இதனை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த கும்பாபிஷேக விழாவிற்கு 10,000 மேற்பட்ட பொதுமக்கள் வருகை தருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.



இதனால் கும்பாபிஷேகம் நடைபெறும் வரும் 21-ஆம் தேதி எவ்வாறு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட வேண்டும் எவ்வாறு பொதுமக்களை கூட்ட நெரிசலில் இல்லாமல் தரிசனத்திற்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட ஆய்வு மற்றும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனையில் தாராபுரம் டி.எஸ்.பி கலையரசன் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நகர் மன்ற தலைவர் பாபு கண்ணன் திமுக நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.‌

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...