ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி வனச்சரகங்களில் விலங்குகளை கண்காணிக்க தானியங்கி கேமரா பொருத்தும் பணிகள் நாளைய தினம் தொடங்க உள்ள நிலையில் கேமரா பொருத்துவது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை: வனவிலங்குகளை கண்காணிக்க தானியங்கி கேமரா பொருத்துவது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை. ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய வனச்சரகங்களில் வனவிலங்குகளை கண்காணிக்க தானே இயங்கும் கேமரா பொருத்தும் பணி நாளை முதல் துவங்க இருக்கிறது.
இந்த பணியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள், வனவர்கள், கண்காணிப்பாளர், ஆகிய பணியாளர்கள் செயல்பட உள்ளனர்.
இவர்களுக்கு வனவிலங்குகளை கண்காணிப்பதற்கு கேமரா எப்படி பொருத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சி வகுப்பு அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் வழங்கப்பட்டது.
இதில் வனத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.