வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், பூமியில் ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார் - கோவையில் போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடிகர் ரஜினி ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், ஆனால் பூமியில் ஜொலிப்பது ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



கோவை: நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் சக்கைபோடு போக்குவருகிறது. இதனால் குஷியான அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனையும் படைத்து வருகின்றது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோவை நகரின் பல்வேறு இடங்களில் "வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், பூமியில் ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார்" என்ற வாசகங்களுடன் ரஜினி ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.



கோவை ரயில் நிலையம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அத்துறையினர் மத்தியில் நிலவி வருகிறது.

அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்து மாறுபட்ட கருத்துகளை திரையுலகில் இருப்பவர்களும், விமர்சகர்களும் தெரிவித்து வரும் நிலையில் கோவை மாவட்ட ரஜினி ரசிகர்கள் இந்த போஸ்ட்டரை ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...