வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், பூமியில் ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார் - கோவையில் போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடிகர் ரஜினி ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், ஆனால் பூமியில் ஜொலிப்பது ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



கோவை: நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் சக்கைபோடு போக்குவருகிறது. இதனால் குஷியான அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனையும் படைத்து வருகின்றது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோவை நகரின் பல்வேறு இடங்களில் "வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், பூமியில் ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார்" என்ற வாசகங்களுடன் ரஜினி ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.



கோவை ரயில் நிலையம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அத்துறையினர் மத்தியில் நிலவி வருகிறது.

அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்து மாறுபட்ட கருத்துகளை திரையுலகில் இருப்பவர்களும், விமர்சகர்களும் தெரிவித்து வரும் நிலையில் கோவை மாவட்ட ரஜினி ரசிகர்கள் இந்த போஸ்ட்டரை ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...