ஆடி கடைசி வெள்ளி விழா கொண்டாட்டம் – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற ஆடி கடைசி வெள்ளி விழாவில் நடைபெற்ற அசுவ மேத வழிபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.



கோவை: ஆடி கடைசி வெள்ளியையொட்டி பத்தரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற விழாவில் குதிரை இரு கால்களையும் தூக்கி அம்மனை வணங்கிய காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது.



அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அம்மன் பவனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு துதி பாடியபடியே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

கோவை சத்தி சாலை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் 52 வது ஆண்டு ஆடி திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது.

ஆடி மாதத்தில் நான்கு வெள்ளிக்கிழமைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்ற விழாவில் இறுதி வெள்ளிக்கிழமையாக நேற்றைய தினம் ஆவணி ஒன்றாம் தேதிவெள்ளிக்கிழமையில் ஆடி ஐந்தாவது வெள்ளி விழா கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக உற்சவமூர்த்திக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிவனடியார்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. ஜமாப் இசையுடன் பம்பை உடுக்கை முழங்க அம்மனுக்கு ஆரத்திகள் எடுக்கப்பட்ட நிலையில் குதிரை நிறுத்தி வைக்கப்பட்டு அசுவ மேத வழிபாடும் நடத்தப்பட்டது.



அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்சவமூர்த்தியான அருள்மிகு பத்திரகாளியம்மன் எழுந்தருள அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தகுதிரை இரு கால்களையும் தூக்கி வணங்கிய காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற அம்மன் பவனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை துதித்து பாடியபடியே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...