கோவையில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் - பாஜக நிர்வாகியின் புது வீட்டிற்கு வருகை

கோவை துடியலூர் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக நிர்வாகியின் இல்லத்திற்கு நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வருகை தந்தார். அப்போது, மோகன்குமாரின் புது வீட்டை சுற்றிப்பார்த்து ஆசி வழங்கி அவரது குடும்பத்தினருடன் கவர்னர் போட்டோ எடுத்துக்கொண்டார்.



கோவை: பாஜக நிர்வாகி மோகன்குமாரின் புதிய வீட்டிற்கு வருகைதந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், இங்கு வந்தது இனிமையாக இருப்பதாக கருத்து தெரிவித்தார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பாலாஜி நகர் பகுதியில் வசிப்பவர் பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவை சேர்ந்த மாநில துணைத்தலைவர் மோகன்குமார். இவர் யுபிவிசி தொழில் செய்து வருகிறார். இவர் பாலஜி நகர் பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு புதிய வீடு கட்டி கிரகபிரவேசம் செய்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் கோவை காரமடை அடுத்துள்ள ஓன்னிபாளையத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து துடியலூர் அருகே பாலஜிநகர் பகுதியில் உள்ள மோகன்குமார் வீட்டிற்கு வந்தார்.



அவரை மோகன்குமார் குடும்பத்தினர் பூச்சென்டு கொடுத்து வரவேற்று உபசரித்தனர். தொடர்ந்து வீட்டை சுற்றி பார்த்த கவர்னர் இல.கணேசன் மோகன்குமார் குடும்பத்தினருக்கு ஆசி வழங்கி அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

மேலும் அங்கு அவரைக் காணவந்திருந்தவர்கள் அனைவருடனும் போட்டோ எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நிருபர்களிடம் கூறும்போது, தான் சொந்த வேலையாக வந்ததாகவும், அத்துடன் மோகன்குமார் மற்றும் நண்பர்களை பார்த்து செல்லலாம் என்று இங்கு வந்ததாகவும், இங்கு வந்தது இனிமையாக இருந்தது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, பா.ஜ.கவை சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் ப்ரீத்தி லட்சுமி, அசோகபுரம் ஊராட்சி 7 வது வார்டு கவுன்சிலர் பார்த்திபன், இந்து முன்னணி வடக்கு மாவட்ட பொதுசெயலாளர் தியாகராஜன், கவுன்சிலர் சுதாகர், சசிகுமார், பூஜி என்கிற அருண்குமார், விமல்பாலாஜி, முகேஷ்ராஜ், நந்தகோபால், விஷ்ணு மற்றும் பாலாஜி நகர் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...