கோவையில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் - பாஜக நிர்வாகியின் புது வீட்டிற்கு வருகை

கோவை துடியலூர் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக நிர்வாகியின் இல்லத்திற்கு நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வருகை தந்தார். அப்போது, மோகன்குமாரின் புது வீட்டை சுற்றிப்பார்த்து ஆசி வழங்கி அவரது குடும்பத்தினருடன் கவர்னர் போட்டோ எடுத்துக்கொண்டார்.



கோவை: பாஜக நிர்வாகி மோகன்குமாரின் புதிய வீட்டிற்கு வருகைதந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், இங்கு வந்தது இனிமையாக இருப்பதாக கருத்து தெரிவித்தார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பாலாஜி நகர் பகுதியில் வசிப்பவர் பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவை சேர்ந்த மாநில துணைத்தலைவர் மோகன்குமார். இவர் யுபிவிசி தொழில் செய்து வருகிறார். இவர் பாலஜி நகர் பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு புதிய வீடு கட்டி கிரகபிரவேசம் செய்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் கோவை காரமடை அடுத்துள்ள ஓன்னிபாளையத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து துடியலூர் அருகே பாலஜிநகர் பகுதியில் உள்ள மோகன்குமார் வீட்டிற்கு வந்தார்.



அவரை மோகன்குமார் குடும்பத்தினர் பூச்சென்டு கொடுத்து வரவேற்று உபசரித்தனர். தொடர்ந்து வீட்டை சுற்றி பார்த்த கவர்னர் இல.கணேசன் மோகன்குமார் குடும்பத்தினருக்கு ஆசி வழங்கி அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

மேலும் அங்கு அவரைக் காணவந்திருந்தவர்கள் அனைவருடனும் போட்டோ எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நிருபர்களிடம் கூறும்போது, தான் சொந்த வேலையாக வந்ததாகவும், அத்துடன் மோகன்குமார் மற்றும் நண்பர்களை பார்த்து செல்லலாம் என்று இங்கு வந்ததாகவும், இங்கு வந்தது இனிமையாக இருந்தது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, பா.ஜ.கவை சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் ப்ரீத்தி லட்சுமி, அசோகபுரம் ஊராட்சி 7 வது வார்டு கவுன்சிலர் பார்த்திபன், இந்து முன்னணி வடக்கு மாவட்ட பொதுசெயலாளர் தியாகராஜன், கவுன்சிலர் சுதாகர், சசிகுமார், பூஜி என்கிற அருண்குமார், விமல்பாலாஜி, முகேஷ்ராஜ், நந்தகோபால், விஷ்ணு மற்றும் பாலாஜி நகர் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...