கோவையில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் - பாஜக நிர்வாகியின் புது வீட்டிற்கு வருகை

கோவை துடியலூர் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக நிர்வாகியின் இல்லத்திற்கு நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வருகை தந்தார். அப்போது, மோகன்குமாரின் புது வீட்டை சுற்றிப்பார்த்து ஆசி வழங்கி அவரது குடும்பத்தினருடன் கவர்னர் போட்டோ எடுத்துக்கொண்டார்.



கோவை: பாஜக நிர்வாகி மோகன்குமாரின் புதிய வீட்டிற்கு வருகைதந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், இங்கு வந்தது இனிமையாக இருப்பதாக கருத்து தெரிவித்தார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பாலாஜி நகர் பகுதியில் வசிப்பவர் பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவை சேர்ந்த மாநில துணைத்தலைவர் மோகன்குமார். இவர் யுபிவிசி தொழில் செய்து வருகிறார். இவர் பாலஜி நகர் பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு புதிய வீடு கட்டி கிரகபிரவேசம் செய்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் கோவை காரமடை அடுத்துள்ள ஓன்னிபாளையத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து துடியலூர் அருகே பாலஜிநகர் பகுதியில் உள்ள மோகன்குமார் வீட்டிற்கு வந்தார்.



அவரை மோகன்குமார் குடும்பத்தினர் பூச்சென்டு கொடுத்து வரவேற்று உபசரித்தனர். தொடர்ந்து வீட்டை சுற்றி பார்த்த கவர்னர் இல.கணேசன் மோகன்குமார் குடும்பத்தினருக்கு ஆசி வழங்கி அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

மேலும் அங்கு அவரைக் காணவந்திருந்தவர்கள் அனைவருடனும் போட்டோ எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நிருபர்களிடம் கூறும்போது, தான் சொந்த வேலையாக வந்ததாகவும், அத்துடன் மோகன்குமார் மற்றும் நண்பர்களை பார்த்து செல்லலாம் என்று இங்கு வந்ததாகவும், இங்கு வந்தது இனிமையாக இருந்தது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, பா.ஜ.கவை சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் ப்ரீத்தி லட்சுமி, அசோகபுரம் ஊராட்சி 7 வது வார்டு கவுன்சிலர் பார்த்திபன், இந்து முன்னணி வடக்கு மாவட்ட பொதுசெயலாளர் தியாகராஜன், கவுன்சிலர் சுதாகர், சசிகுமார், பூஜி என்கிற அருண்குமார், விமல்பாலாஜி, முகேஷ்ராஜ், நந்தகோபால், விஷ்ணு மற்றும் பாலாஜி நகர் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...