பிரதமரின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு 73 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் - பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிய கோவை மாவட்ட பாஜகவினர்

பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாளையொட்டி கோவையில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பூமி பூஜை செய்து பாஜகவினர் தொடங்கியுள்ளனர்.


கோவை: பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, நடைபெறும் இலவச திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 73வது பிறந்தநாள் காண்கிறார். பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை செட்டிப்பாளையம்- போத்தனூர் சாலையில் சக்தி பள்ளிக்கு எதிரில் 73 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் பூமி பூஜை செய்து திருமணத்திற்கான பணிகள் துவங்கியது. இந்நிகழ்வில் மாநில பொது செயலாளர் முருகானந்தம், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பூஜைகள் செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...