கோவையில் மாநகர காவல் ஆணையர் தலைமையில்  போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்!

ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்ற போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் கட்டுபடுத்துவதற்கான கூட்டத்தில் மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.


கோவை: மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனதலைமை ஆசிரியர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன் மற்றும் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 145 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,

போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.முதலமைச்சர் கடந்த 2 ஆண்டுகளாக போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு உறுதிமொழிகள் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு குறித்து காவல்துறை மூலமாகவும். பல்வேறு துறைகளின் மூலமாகவும் துரித நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு, பல்வேறு துறைகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

பள்ளிகளில் உள்ள கழிவறைகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் இதர இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொண்டு. போதை பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து ஆராய வேண்டும். பள்ளி மாணவ, மாணவியர்கள் எதிர்காலம் சிறக்கவும், அவர்கள் ஆரோக்கியமான எதிர்காலத்தை அமைக்கவும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

எனவே, மாணவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பெற்றோர்களை அழைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். மேலும், போதை பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறந்த கவுன்சிலிங் வழங்கவும். உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க காவல்துறையும் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் தயாராக உள்ளது.

இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். போதை பொருட்கள் பயன்படுத்துவது குறித்து தயக்கமின்றி உண்மையான தகவல்களை காவல்துறைக்கு ஆசிரிய பெருமக்கள் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...