கோடமலை ஓசட்டி பகுதியில் சாலை மேம்பாட்டு பணியை துவக்கி வைத்த சுற்றுலா துறை அமைச்சர்!

கோடமலை அடுத்த ஒசட்டி பகுதியில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள சாலை மேம்பாட்டுப் பணியின் துவக்க விழா நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்தார்.


நீலகிரி: குன்னூர் அடுத்த கோடமலை அருகே சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியம், கோடமலை - ஒசட்டி பகுதியில் முதலமைச்சர் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெ.பிரேம்குமார், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுனிதா நேரு, பர்லியார் ஊராட்சி தலைவர் சுசிலா, துணைதலைவர் தீனதயாளன், ஒன்றிய குழு உறுப்பினர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் கா.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...