உடுமலை அருகே சாலையில் உலா வந்த படையப்பா யானை - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

உடுமலை அருகே தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மறையூர் பேருந்து நிலையம் அருகே படையப்பா என்ற யானை , உடுமலை - மூணாறு சாலையில் உலா வந்ததை கண்டதும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே மறையூர் பேருந்து நிலையம் பகுதியில் படையப்பா யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மறையூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே படையப்பா என்ற யானை, உடுமலை - மூணாறு சாலையில் உலா வந்ததை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுநர்களும் அச்சமடைந்து வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர்.



ஆனால் அந்த யானை எந்தவித அசம்பாவிதமும் செய்யாமல் சாலையை கடந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேயிலை தோட்டத்தை நோக்கி சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இருப்பினும் வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...