Startup TN தமிழ்நாடு புத்தொழில்‌ திருவிழா - கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில்‌ கோலாகலம்

"TANSEED" 5.0 திட்டத்தின்‌ கீழ்‌ தொழில் முனைவோர்களுக்கு ரூ.15 லட்சத்திற்கான தேர்வு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், தமிழக குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்துறை அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ மற்றும்‌ தமிழக தொழில்துறை அமைச்சர்‌ T.R.B ராஜா கலந்து கொண்டனர்.


கோவை: வெற்றி பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ "TANSEED" 5.0 திட்டத்தின்‌ நிதியை தங்களின்‌ தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌ என தெரிவிக்கப்பட்டது.

Startup TN முன் முயற்சியான "TANSEED" 5.0 ஆரம்ப நிலையில்‌ உள்ள தொழில்‌ முனைவோருக்கான நிதியுதவி அளிக்கும்‌ திட்டமாகும்‌. இந்த திட்டத்தின்‌ நிதியானது பசுமை தொழில்நுட்பம், கிராமப்புற தாக்கம்‌ மற்றும்‌ பெண்கள்‌ தலைமையிலான தொழில்‌ முனைவோருக்கு ரூ.15 லட்சம்‌ வரை மானியம்‌ மற்றும்‌ 3% பங்கு வழங்குகின்றது.

மேலும்‌ பிற துறைகளில்‌ உள்ள தொழில்‌ முனைவோருக்கு ரூ.10 லட்சம்‌ வழங்குகின்றது. இப்புத்தொழில்‌ திருவிழாவை தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ காணொளி உரையுடன்‌ தொடங்கி வைத்தார்‌.

மேலும்‌ தமிழக குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்துறை அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ மற்றும்‌ தமிழக தொழில்துறை அமைச்சர்‌ T.R.B ராஜா கலந்து கொண்டு தலைமை தாங்கினார்‌.

அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பகத்தின்‌ தொழில்‌ முனைவோர்களான சுபத்ரா (நிறுவனர்‌ PVR Foods), ரிஃபானா சாகுல்(நிறுவனர் Myco Mushroom Hub), T.விக்னேஷ்வரன்‌ (நிறுவனர்‌, Nandha InfoTech) மற்றும் K.உதயகுமார்( நிறுவனர் Carpro Technologies) ஆகியோர்களுக்கு TANSIM -TANSEED 5.0 திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.15 லட்சத்திற்கான தேர்வு சான்றிதழ்களை வழங்கினார்‌.

இத்திட்டத்தின்‌ பயனாளிகள்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி அவர்களிடம்‌ தங்கள்‌ புத்தொழில்‌ முயற்சிகள்‌ மற்றும்‌ யோசனைகள்‌ குறித்து 23.08.2023 அன்று கலந்துரையாடினர்‌. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ ஏ.சோமசுந்தரம்‌ அவர்கள்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பக செயல்‌ இயக்குனர்‌ மற்றும்‌ தலைமை செயல்‌ அதிகாரி A.V.ஞானசம்பந்தம்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌. வெற்றி பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ இந்த திட்டத்தின்‌ நிதியை தங்களின்‌ தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌ என தெரிவிக்கப்பட்டது.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...