சூலூரில் காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்!

சூலூர் அடுத்த இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை உணவு திட்ட துவக்க விழா நிகழ்ச்சியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கலந்து கொண்டு திட்டத்தை துவங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி பரிமாறினார்.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த காலை உணவு திட்ட துவக்க விழா கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டம், சூலூர் தாலுகா இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற துவக்க விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி பரிமாறினார்.

முன்னதாக இருகூர் பேரூராட்சி தலைவர் ஆ.சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கே.கீதாஞ்சலி, வரவேற்புரை ஆற்றினார். சிறப்புரை நிகழ்த்திய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமிழ்நாட்டில் இன்று துவக்கப்படும் காலை உணவு திட்டம் மாபெரும் வெற்றி பெறும்.



இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் ஊட்டச்சத்து பெறுவார்கள். அவர்களது கல்வித்திறன் மேம்படும் . பொதுக் கல்வியை பலப்படுத்த இத்திட்டம் உதவி செய்யும். இன்று சந்திராயன் 3 வெற்றியை நாடே கொண்டாடுகிறது.

இந்த மூன்று திட்டங்களிலும் திட்ட இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை. அதைவிட முக்கியமானது அந்த மூன்று திட்ட இயக்குநர்களும் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் . எனவே தான் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றார்.

தனது கனவு திட்டமாக இதை இவர் முன்னிறுத்துகின்றார். ஏற்கனவே தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் பல்வேறு சமுக நலத்திட்டங்களை போலவே, முதலமைச்சர் முத்தாய்ப்பான இந்த திட்டமும் முழு வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

துவக்க விழா நிகழ்வில் சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி அவர்கள், சூலூர் வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச் செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், சூலூர் தாலுகா செயலாளர் சந்திரன், இருகூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஜி.ஜெயக்குமார், இருகூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், முருகசாமி, ஆனந்தன், இருகூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...