மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு - சிறுத்தை தாக்கியிருக்கலாம் என தகவல்!

கோவை தடாகம் அருகேயுள்ள மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுகசூரியா என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது கைகள் மற்றும் கழுத்து பகுதியில் சிறுத்தை தாக்கிய தடம் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தடாகம் அருகே மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மேல்முடி ரங்கநாதர் கோவில் உள்ளது. இது ஒரு மலைக்கோவில் ஆகும். இங்கு சாலை வசதியோ படிக்கட்டுகளோ இல்லாததால், மலைப்பாதை வழியாக மட்டுமே ஏறி செல்ல முடியும்.

வழக்கமாக விசேஷ நாட்களில் அதிகமான பக்தர்கள் செல்வது வழக்கம். மற்றபடி இக்கோவிலுக்கு ஒரு சிலர் மட்டுமே சென்று வருவர்.

இந்நிலையில் நேற்று மாலை மேல்முடி தண்ணீர் பாறை பகுதியில் வன களப்பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சடலத்தின் கை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சிறுத்தை தாக்கியது போல் காயங்கள் இருந்துள்ளது.

இதனை அடுத்து தடாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் உயிரிழந்த நபர் கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுகசூர்யா (24) என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சுகசூரியா அடிக்கடி சிவன் கோவிலுக்கும் மலை கோவில்களுக்கும் தனியாகச் சென்று வருவார் என்றும் அவ்வாறு கோவில்களுக்குச் சென்றால் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் வருவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கிளம்பிய சுகசூரியா வீடு திரும்பாத நிலையில் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் காட்டு மாடு ஒன்றை சிறுத்தை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...