உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாம் நாள் விழாவான இன்று நடைபெற்ற திருமஞ்சனம், ஹோமம், பவித்ரம் சாற்றுதல் உள்ளிட்டவற்றில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர்: உடுமலை திருப்பதி கோவிலில் பவித்ரோத்சவ விழாவின் இரண்டாவது நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா நேற்று தொடங்கியது. விழாவின்இரண்டாவது நாள் நிகழ்வாக இன்று திருமஞ்சனம், ஹோமம்பவித்ரம் சாற்றுதல்உள்ளிட்டவையும்மாலை சாற்றுமுறைநடைபெற்றன.
பின்னர் கோவை பஜணை குழுவினரின்நடைபெற்றது. உடுமலை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துஇருந்தனர்.